
சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேடு மார்க்கெட்டில் ரசாயனம் மூலம் பழுக்க வைத்த பழங்களை பொதுமக்களுக்கு விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சுந்தரமூர்த்தி, சதீஷ்குமார் ஆகியோர் தலைமையிலான குழுவினர் நேற்று கோயம்பேடு பழம் மார்க்கெட்டில் அதிரடி ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 35 கடைகளில் ரசாயனம் மூலம் பழுக்க வைத்த மாம்பழங்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதனால் சுமார் 7 டன் எடையுள்ள மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள காலி இடத்தில் கொட்டி அழித்தனர்.