சேலம் மாவட்டம் ஜல்லிக்காட்டை சேர்ந்த கட்டிட தொழிலாளியான ரவிக்குமார்(24) என்பவர் குடிபோதையில் நேற்று முன் தினம் இரவு 11 மணி அளவில் 75 வயதான மூதாட்டியின் வீட்டுக்குள் புகுந்து அவரை கட்டிப்பிடித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனால் அலறிய மூதாட்டியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ரவிக்குமாரை அடித்து அவரது வீட்டில் விட்டனர்.

அதன் பிறகு மீண்டும் அந்த பகுதிக்கு வந்த ரவிக்குமார் வீட்டு திண்ணையில் தூங்கிக் கொண்டிருந்த 65 வயது மூதாட்டியிடம் பாலியல் சீண்டலில்  ஈடுபட்டுள்ளார். அப்போது சத்தம் கேட்டு வெளியே வந்த மூதாட்டியின் மருமகள் மீது பாய்ந்து பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். பிறகு அந்தப் பெண்ணின் கணவர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அந்த வாலிபரை அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்த நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.