மகாராஷ்டிராவில் சுற்றுலாப் பெண் 8 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

மகாராஷ்டிரா மாநிலத்தின் புல்தானா மாவட்டத்தில் மிகவும் அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. புல்தானா நகருக்கு அருகில் உள்ள ராஜூர் காட் பகுதியில், தனது உறவினர்களுடன் நடைபயிற்சிக்கு வந்த 35 வயது பெண்ணை, 8 பேர் கொண்ட கும்பல் கத்தியை காட்டி மிரட்டி பலாத்காரம் செய்துள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த எம்.எல்.ஏ சஞ்சய் கெய்க்வாட் போரகெடி காவல் நிலையத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் வந்து முற்றுகையிட்டார் . பெண் பலாத்காரம் செய்யப்படுவதாக தகவல் கிடைத்தும் 4 மணி நேரமாகியும் போலீசார் சம்பவ இடத்திற்கு வரவில்லை.

இதனால் எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் கடும் ஆக்ரோஷமாகி விட்டார். கடந்த ஒன்றரை மாதங்களில் இந்த ராஜூர் காட் பகுதியில் 6 முதல் 7 கும்பல் பலாத்காரம் நடந்துள்ளதாகவும் கெய்க்வாட் கூறியுள்ளார். புல்தானா மாவட்டத்தில் உள்ள ராஜூர் காட் பகுதியில் நடைபயிற்சிக்கு வரும் பெண்கள் மற்றும் சிறுமிகளை வெளியில் இருந்து வரும் கும்பல் கத்தியை காட்டி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்வதாக சஞ்சய் கெய்க்வாட் குற்றம் சாட்டியுள்ளார்.

கிடைத்த தகவலின்படி, ராஜூர் காட் பகுதியில் அந்தப் பெண்ணை 8 பேர் பலாத்காரம் செய்துள்ளனர். ஆனால், போலீசாருக்கு தகவல் கிடைத்தும், போலீசார் உரிய நேரத்தில் சம்பவ இடத்திற்கு வரவில்லை. எனவே, இந்த குற்றவாளிகள் மீது கடுமையான பலாத்கார வழக்கு பதிவு செய்து  செய்யப்படும் வரை, போலீஸ் நிலையத்தை விட்டு நகர மாட்டேன் என, எம்.எல்.ஏ., சஞ்சய் கெய்க்வாட் தெரிவித்தார். இதையடுத்து, இந்த வழக்கில் போலீஸார் தீவிர நடவடிக்கையில் இறங்கினர்..

இந்த சம்பவத்தால் புல்தானா மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதுதான் இப்போது முக்கியம். குற்றவாளிகளை விரைவில் பிடித்து கடும் தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே  இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல்நிலை நன்றாக இருப்பதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது..