
உத்திரபிரதேச மாநிலத்தில் சாட்தவலா பகுதி உள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணும் ஒரு வாலிபரும் கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு அந்த வாலிபரின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்து வைக்கவும் முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை கவனித்து வந்தனர். இந்த நிலையில் முசாபர் நகர் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அந்த வாலிபர் இளம்பெண்ணை அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து அந்த இளம் பெண் தன்னை காதலித்து ஏமாற்றி விட்டநிலையில் வேறொரு பெண்ணையும் திருமணம் செய்யப் போகிறாயா என்று தன் காதலனிடம் கேட்டுள்ளார்.
இதன் காரணமாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் மோதல் முற்றியது. இதில் அந்த இளம் பெண் ஆத்திரமடைந்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்தார். பின்னர் தன் காதலனின் அந்தரங்க உறுப்பை கத்தியால் வெட்டினார். இதனால் வலி தாங்க முடியாமல் காதலன் அலறிய நிலையில் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை வீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்க அந்த வாலிபருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அந்த இளம்பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.