இந்தியாவில் அனைத்து மாநிலங்களுடன் ஒப்பிடும்போது உத்திர பிரதேச மாநிலத்தில் பாலியல் வன்புறுத்தல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதற்காக அரசு பல கட்ட நடவடிக்கைகளை எடுத்த போதிலும் சில காமக் கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். தற்போது ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது.

அதாவது உத்திரபிரதேசம் மாநிலத்தில் பாலியல் வல்லுறவுக்கு ஆளான 85 வயது மூதாட்டி உயிரிழந்தார். வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டியை அவருடைய மருமகன் காணச் சென்ற போது அண்டை வீட்டில் வசிக்கும் ராகேஷ் (35) என்பவர் பலாத்காரம் செய்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் குற்றவாளியை கைது செய்த நிலையில் மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். ராகேஷ் குடிக்கு அடிமையானவர் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.