
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் இந்த கல்வி ஆண்டுக்கான முதுகலை எம்சிஏ, எம்பிஏ படிப்புகளுக்கான பொது நுழைவு தேர்வு மற்றும் பிளான் படிப்புகளில் சேர்வதற்கான பொது நுழைவு தேர்வுகள் இன்று மற்றும் நாளை நடைபெற உள்ளது. இந்த தேர்வுகள் விழுப்புரம் அண்ணா பல்கலைக்கழக அரசு பொறியியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்கு வரும் தேர்வர்களின் வசதிக்காக விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி காப்பகத்திற்கு அரசு பஸ் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் விழுப்புரம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி முதல்வர் செந்தில் தலைமையிலான குழுவினர் இந்த தேர்வுக்கான விரிவான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அதேபோல்இன்று காலை 10 மணி முதல் 12 மணி வரையில் எம்சிஏ தேர்வு, பிற்பகல் 2:30 மணி முதல் 4.30 மணி வரை எம்பிஏ தேர்வு நடைபெறுகிறது. அதே போல் எம் இ, எம் டெக், எம் ஆர், எம் பிளான் போன்ற தேர்வுகள் நாளை காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெறுகிறது.