தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிம்பு தான் நடித்த பல சூப்பர் ஹிட் திரைப்படங்களின் மூலம் தற்போது முன்னணி ஹீரோவாக உயர்ந்திருக்கிறார். கடந்த சில வருடங்களாக உடல் எடை கூடி எந்த படத்திலும் கமிட் ஆகாமல் இருந்த சிம்பு மாநாடு என்ற திரைப்படத்தின் மூலம் மாபெரும் கம்பேக் கொடுத்தார். இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிம்பு வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்தார். இந்த படமும் நல்ல வெற்றி பெற்றதால் சிம்பு தன் சம்பளத்தை 40 கோடி ரூபாய் வரை உயர்த்தியதாக கூறப்பட்டது.

இதனால் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்து வந்த பத்து தல திரைப்படத்திற்கு பிறகு எந்த படத்திலும் அவர் கமிட்டாகவில்லை. இதன் காரணமாக சிம்பு தன் சம்பளத்தை குறைக்க முடிவு செய்துள்ளாராம். தற்போது தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ராஜ்கமல் ஃபிலிம் தயாரிப்பில் சிம்பு தன்னுடைய 48-வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் நடிப்பதற்கு சிம்பு வெறும் 25 கோடி ரூபாய் மட்டும்தான் சம்பளம் வாங்குகிறாராம். மேலும் தன்னை வைத்து பிரம்மாண்டமாக படம் எடுக்க தயாராக இருந்தால் அவர்களுக்காக தன் சம்பளத்தை குறைக்க சிம்பு தயாராக இருக்கிறாராம். சிம்புவின் இந்த முடிவு தற்போது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.