
தமிழகத்தில் 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் 13ஆம் தேதி பொது தேர்வு தொடங்கிய நிலையில் தற்போது தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதனை தொடர்ந்து பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற ஏப்ரல் ஆறாம் தேதி பொது தேர்வு தொடங்கும் நிலையில் ஏப்ரல் 20-ம் தேதி தேர்வு முடிவடைகிறது.
இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி வருகின்ற ஏப்ரல் 24ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியில் அறுபதாயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். மே 3ஆம் தேதி வரை விடைத்தாள் திருத்தப்பட்டு மே 17ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என தேர்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.