சென்னை மாவட்டத்தில் உள்ள வண்ணார்பேட்டை பகுதியில் காமராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மூல கொத்தளத்தில் இருக்கும் கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் காமராஜ் மெரினா கடற்கரைக்கு சென்று விட்டு இரவில் வீட்டிற்கு வந்தார். இதனையடுத்து செல்போனை சார்ஜ் செய்தபடி காமராஜ் நண்பரிடம் பேசிக் கொண்டிருந்ததாக தெரிகிறது.

அப்போது மின்சாரம் தாக்கி காமராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காமராஜின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.