திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நெடுவலசு பகுதியில் விவசாயியான சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று மோட்டார் சைக்கிளில் சுரேஷ் மார்க்கம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது திண்டுக்கல்லில் இருந்து முத்தூர் நோக்கி சென்ற தனியார் பேருந்து மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த சுரேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுரேஷின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.