தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மொளப்பனஅள்ளி பகுதியில் கூலி வேலை பார்க்கும் மணி(62) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மணி தனது அண்ணன் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்டார். ஆனால் நேற்று காலை பூலாம்பட்டி பகுதியில் இருக்கும் ஆற்றில் மணி சடலமாக மிதந்ததை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மணியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் மணி ஆற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.