கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி வடுகபாளையம் ரெயின்போ காலனியில் வியாபாரியான சரவணகுமார்(42) என்பவர் வசித்து வருகிறார். இவர் சரக்கு ஆட்டோவில் கோவையிலிருந்து பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் நான்கு வழிச்சாலையில் சென்றான்பாளையம் பிரிவு பகுதியில் சென்ற போது அந்த வழியாக வந்த கார் சரக்கு ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சரவணக்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.