
ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் ஏற்பட்ட கோரமான ரயில் விபத்தில் சிக்கி 275 பேர் உயிரிழந்த நிலையில், பலர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் முடிவடைந்து தண்டவாளங்களில் சீரமைக்கும் பணியானது நடைபெற்று வந்தது.
இதனையடுத்து விபத்து நடந்த இடத்தில் 51 மணி நேரத்திற்கு பிறகு சரக்கு ரயில் போக்குவரத்து நேற்று தொடங்கியது. இதனைத் தொடர்ந்து பயணிகள் ரயில் சேவையானது நாளை மறுநாள் முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.