
சென்னை மாவட்டத்தில் உள்ள கொண்டிதோப்பு பகுதியில் ஆனந்தராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி போலீசாக வேலை பார்த்து வருகிறார். தற்போது ஆனந்தராஜனின் மனைவி கர்ப்பிணியாக இருக்கிறார். கடந்த 12-ஆம் தேதி கணவன், மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் எழும்பூர்-பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது சாலையோரம் இருந்த பெரிய மரம் முறிந்து அவர்கள் மீது விழுந்தது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த ஆனந்தராஜ் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஆனந்தராஜ் பரிதாபமாக இறந்து விட்டார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.