முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் சிலை நிறுவப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் வி.பி.சிங்கிற்கு சிலை அமைக்கப்படும் என கடந்த ஏப்ரல் 20-ம் தேதி சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இன்று விபி சிங் பிறந்த நாளை முன்னிட்டு அதனை கொண்டாடும் விதமாக தமிழகத்தில் அவருக்கு சிலை நிறுவப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.