
தொழில்துறையில் 13 வது இடத்தில் இருந்து முதலிடத்திற்கு தமிழகம் முன்னேறியுள்ளது என்று அமைச்சர் டிஆர்பி ராஜா பெருமிதம் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில் 50 சதவீதம் பேர் தமிழ்நாட்டில் உள்ளனர். பெண்களுக்கான வேலை வாய்ப்பு வழங்குவதிலும் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது என கூறிய அவர், தொழில் செய்வதற்கு உகந்த சூழ்நிலை தமிழ்நாட்டில் உள்ளது என தெரிவித்துள்ளார். மேலும் இந்திய அளவில் தொழில்துறையில் தமிழகம் 13வது இடத்தில் இருந்த நிலையில் தற்போது முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளதாகவும் கூறியுள்ளார்.