
தமிழகத்தில் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மூலமாக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஒரு லட்சம் பயனாளிகளுக்கு மின் இணைப்புகளை அரசு இலவசமாக வழங்கிய நிலையில் அரசின் எரிசக்தி துறை மானிய கோரிக்கையில் இதற்காக குறிப்பிட்டு அளவிலான நிதியை ஒதுக்கீடு செய்து அறிவித்தது.
இந்நிலையில் மேலும் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை ஜூலை 27 அதாவது நாளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இலவச மின்சாரத்திற்காக விண்ணப்பித்து காத்திருக்கும் விவசாயிகளின் பட்டியலில் முன்னுரிமை அடிப்படையில் இலவச மின்விநியோகம் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.