
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தோணி முடி எஸ்டேட் முதல் பிரிவில் வட மாநில பெண் தொழிலாளியான அல்கத்திகா(23) என்பவர் வசித்து வருகிறார். நிறைமாத கர்ப்பிணியான அல்கத்திகாவுக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் ஆம்புலன்ஸ் மூலம் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்நிலையில் வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த போது பிரசவ வலி அதிகரித்ததால் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தினார். பின்னர் மருத்துவ உதவியாளர் செல்வகுமார் பெண்ணுக்கு பிரசவம் பார்த்தார். அதில் அவர் அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயும், சேயும் வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர். துரிதமாக செயல்பட்டு பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளருக்கு உறவினர்கள் நன்றி தெரிவித்தனர்.