
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நாயக்கன் பாளையத்தில் முருகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகள் சங்கீதாவுக்கு கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு கூலி தொழிலாளியான கனகராஜ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு முருகேசன் உயிரிழந்ததால் சங்கீதா தனது தந்தையை நினைத்து அழுது கொண்டே இருந்தார். கடந்த 13-ஆம் தேதி உறவினர்கள் முருகேசனுக்கு திதி கொடுப்பதற்காக சென்றனர். அப்போது வீட்டில் தனியாக இருந்த சங்கீதா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் சங்கீதா தற்கொலை தொடர்பாக கனகராஜிடம் விசாரணை நடத்த அவரை காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்தனர். போலீஸ் விசாரணைக்கு பயந்த கனகராஜ் அப்பகுதியில் இருக்கும் தோட்டத்து வெப்பமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கனகராஜின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.