
பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் நம்பிக்கைகளை தன்னுள் கொண்ட ஓர் நாடு இந்தியா என்று கூறப்படுகிறது . இமாச்சலப் பிரதேச மாநிலம், பினி கிராமத்தில் உள்ள பெண்கள் மழை காலங்களில் கொண்டாடப்படும் திருவிழாவிற்காக 5 நாட்கள் ஆடை எதுவும் அணியாமல் நிர்வாணமாக இருப்பது அவர்கள் வழக்கம். மேலும், அந்த 5 நாட்களில் லேசாககூட புன்னகைக்கவும் பெண்களுக்கு அனுமதி கிடையாதாம். இந்த நாட்களில் அவர்கள் கிராமத்திலுள்ள ஆண்கள் முன் தோன்றாமலிருக்க அவர்கள் வீட்டிற்குள்ளே இருக்க வேண்டும் என்ற வழக்கம் இன்றும் பின்பற்றப்படுகிறது.
பினி என்பது ஹிமாச்சலப் பிரதேசத்தின் குலு மாவட்டத்தின் பஞ்சார் தெஹ்சிலில் உள்ள ஒரு நடுத்தர அளவிலான கிராமமாகும், இதில் மொத்தம் 130 குடும்பங்கள் வசிக்கின்றன. 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி பினி கிராமத்தில் 651 பேர் உள்ளனர், இதில் 316 பேர் ஆண்கள், 335 பேர் பெண்கள்.