மேகதாது அணையை கட்டிய தீருவோம்னு கர்நாடக அரசு சொன்னது குறித்த கேள்விக்கு பதிலளித்த தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,

அவ அதானே சொல்லுவான். நீங்க எல்லாம் சொல்லுங்க….  நீங்க நடுநிலையாளர்கள்னு  உங்களை வைத்து பேசுறேன். காங்கிரஸ் என்கிறவன் ஸ்டேட் பார்ட்டியா ? இல்லை ஆல் இந்தியா பார்ட்டியா ? நீ இறையாண்மை பேசுவ…  நீ இந்திய ஒருமைப்பாடு பேசுவ…  தேச ஒற்றுமை பேசுவ…  அப்புறம் நீ கர்நாடகா என்று வரும்போது ஏன் ஸ்டேட் பார்ட்டியா மாறுற ? எவ்வளவு வலிக்கும்னு பாருங்க ? 

எங்கடா இருக்கு இந்திய இறையாண்மை,  ஒருமைப்பாடு. என்னுடைய வளம் எல்லோருக்கும் பொதுவாய் இருக்குல்ல…  அணு உலையில் இருந்து தயாரிக்கும் மின்சாரம்… என்னுடைய அனல் மின்சாரம்….  என்எல்சியில் இருந்து…  பழுப்பு நிலக்கரியில் இருந்து தயாரிக்கும் மின்சாரம் பொது சொத்து. இந்தியாவின் உடமை.

சொத்தை கொடுத்தது என் தாத்தா செம்புலிங்க முதலியார்…. 500 ஏக்கரை எடுத்து கொடுத்துட்டு வந்துட்டான்…  பொது சொத்தாக்கிட்டு வந்துட்டான்…  நீ எடுத்து வச்சுக்கிட்டு,  299 பேர வேலைக்கு சேர்த்த…  ஒரு தமிழனை சேர்த்து இருக்கியா ? பதில் சொல்லுவியா  நீ..  கோபம் வரக்கூடாதுன்னா எப்படி? பேசுனா... ஆண்டி  இந்தியன் அப்பத்தா இந்தியன்னு சொல்லுவ…  உன் வளம் உனக்கு என்றால் ? என் வளம் எனக்கு தானே…