
என் மண், என் மக்கள் யாத்திரையில் கலந்து கொண்டு பேசிய தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, சகோதர, சகோதரிகளே… உங்களுடைய மூக்கையா தேவர் அவர்கள்.. 1971இல் ராமநாதபுரத்தினுடைய பாராளுமன்ற உறுப்பினராக பாராளுமன்றத்தில் இருக்கிறார். அன்னைக்கு தான் காங்கிரஸ் கட்சியும், திமுகவும் இணைந்தும், கச்சதீவை தாரை வார்க்கிறது. அந்த கொடூரமான செயல் நடந்த பொழுது, பாராளுமன்றத்தில் மூக்கையா தேவர் அவர்கள் என்ன பேசினார் ? என்பது தமிழகத்திலே திராவிட கட்சிகளால் இருட்டடிப்பு செய்யப்பட்டு இருக்கின்றது.
முக்கையா தேவர் அவர்கள், பாராளுமன்றத்தில் கச்சத்தீவை கொடுக்க மாட்டோம் என்று போராடினார் என்பதை திராவிட முன்னேற்றக் கழகம் இருட்டடிப்பு செய்திருக்கின்றார்கள். அதை இந்த மேடையில் சொல்வதையும் கூட என்னுடைய கடமையாக நான் பார்க்கிறேன். கச்சத்தீவை கொடுப்பதற்கு இந்திரா காந்தி அம்மையார் அவர்களும், சிறிமாவோ பண்டாரநாயக்கா அவர்களும் கையெழுத்திட்டார்கள்.
இந்திரா காந்தி அம்மையார் அவர்கள் 26.06.1974இல் டெல்லியில் கையெழுத்திட்டார். இலங்கை அதிபர் சிறிமாவோ பண்டாரநாயக்கா அவர்கள் 28.6.1974இல் இரண்டு பேருமே கையெழுத்திடுகிறார்கள். கச்சத்தீவை கொடுப்பதாக இந்திரா காந்தி அம்மையார் கையெழுத்து. கச்சத்தீவை வாங்கி கொள்வதாக சிறிமாவோ பண்டாரநாயக்கா அவருடைய கையெழுத்து.
இதை பாராளுமன்றத்தில் அன்றைய அமைச்சர் ஸ்வரன் சிங் எந்திரிச்சி பேசுகிறார். இந்த மாதிரி கச்சத்தீவு கையெழுத்து போட்டாச்சு, நாங்கள் கொடுத்துட்டோம் என்று… அப்போ மூக்கையா தேவர் அவர்கள் கொதித்தெழுந்து, பாராளுமன்றத்தில் பேசுகிறார். கச்சத்தீவு என்னுடைய தொகுதியில் உள்ளது. நீங்கள் ஜனநாயகம் பேசிக்கொண்டு சர்வாதிகாரி போல் நடந்து கொண்டிருக்கிறீர்கள்.
பல்லாயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது. பல்லாயிரம் மீன்பிடி படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன. இலங்கை படை கச்சத்தீவை நோக்கி செல்கிறது. கச்சத்தீவு தமிழ்நாட்டினுடைய பகுதி. எப்போதும் அது தமிழ்நாட்டுக்கு தான் சொந்தம் என பேசும் போது, காங்கிரஸ்காரர்கள் இடை மறுக்கிறார்கள்…
அப்பொழுது மூக்கையா தேவர் அவர்கள், காங்கிரஸ் கட்சியை பார்த்து… நீங்கள் அனைவருமே தமிழகத்தினுடைய துரோகிகளை என்று சொல்லிவிட்டு, பாராளுமன்றத்தில் இருந்து வெளியே நடந்து வருகின்றார். இதை எப்பொழுதுமே உசிலம்பட்டினுடைய மக்கள் மறந்து விடக்கூடாது. காங்கிரஸ் கூட்டணியில் இருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகம் 2024இல் கிளம்பி வருவார்கள். இவர்களை துரோகிகளை என்று 1974 இல் பாராளுமன்றத்தில் மூக்கையா தேவர் அவர்கள் அப்பவே சொல்லிவிட்டார். நீங்கள் எல்லாம் தமிழகத்தினுடைய துரோகிகள் என கூறியதாக தெரிவித்தார்.