தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தர அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் பல்வேறு தரப்புகளில் இருந்தும் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு தமிழகத்தில் புதிய தொழில்கள் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் அரசு சார்பில் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவையில் மானிய கூட்டத்துடன் கைத்தறி மற்றும் துணி நூல் துறையின் மானிய கோரிக்கையின் போது அரசு இளைஞர்களுக்கான நெசவு பயிற்சி மற்றும் தொழில் முனைவோர் திட்டம் 1.17 கோடி மதிப்பீட்டின் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த திட்டத்தின் மூலம் 18 முதல் 30 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் கைத்தறி மற்றும் நெசவுத்தொழிலில் தொழில்நுட்பங்களை பயிற்சி மூலமாக கற்பித்தல் மற்றும் கைத்தறி பொருட்களின் தராத்தையும் அளவையும் மேம்படுத்துதல் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. மேலும் இந்த திட்டத்தில் இணையும் இளைஞர்களுக்கு தினம் தோறும் 250 ரூபாய் வீதம் 45 நாட்கள் பயிற்சி காலம் முழுவதும் ஊக்கத்தொகை வழங்கப்படும். இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் www.loomworld.in என்ற இணையதளத்தில் தங்கள் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் செப்டம்பர் 20ஆம் தேதி அதாவது இன்றுக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.