
தமிழ் திரை உலகின் வசூல் சக்கரவர்த்தியாக திகழும் நடிகர் விஜய்க்கு மிகப்பெரிய பக்கபலமாக இருப்பவர் அவரது மேனேஜர் ஜெகதீஷ். அரசியல் கட்சி தொடங்கியுள்ள விஜய் சில நாட்களுக்கு முன்பு ஜெகதீஷிடம் மனம் விட்டு பேசி உள்ளார். அப்போது, கட்சி சம்பந்தப்பட்ட எந்த நிகழ்விலும் பங்கேற்க வேண்டாம் என்று ஜகதீஷிடமே அவர் நேரடியாக கூறியுள்ளார். இதன் மூலம் சினிமா வேறு அரசியல் வேறு என்பதில் நடிகர் விஜய் தெளிவாக இருக்கிறார் போல தெரிகிறது.