
தமிழகத்தில் ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்விற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை மே 25ஆம் தேதி வரை நீட்டித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க மே 17 இன்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் விண்ணப்பிக்காத ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு வாய்ப்பளித்த படாது எனவும் கூறப்பட்டிருந்தது. இதுவரை 66 ஆயிரத்து 433 ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ள நிலையில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.