தமிழக உயர்கல்வித் துறையில் கல்லூரி கல்வி இயக்ககத்தின் கீழ், 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகிறது. இதற்கான, 2024-25ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு கடந்த 6ம் தேதி ஆன்லைன் (www.tngasa.in) மூலமாக தொடங்கியது.

இந்நிலையில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு, விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 24ம் தேதி வரை நீட்டித்து கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவடையவிருந்த நிலையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 6 மணி வரை 2,34,883 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.