
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் வருகின்ற ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது. இந்த நிலையில் தன்னைத் தாண்டி பாஜக ஓட்டு வாங்கினால் கட்சியையே கலைத்து விடுவதாக சமீபத்தில் சீமான் சவால் விடுத்திருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள அண்ணாமலை, விஜயலட்சுமி அக்காவுக்கு சீமான் பதில் சொல்லட்டும், என்னை ஏன் அட்டாக் பண்றாரு என நக்கலாக கலாய்த்து உள்ளார். மேலும் நாம் தமிழர் கட்சி எங்களின் (பாஜக) பக்கத்தில் கூட வர முடியாது என விமர்சித்த அவர் தமிழ்நாட்டிற்கு சீமானின் குரல் தேவை என்பதால் தொடர்ந்து கட்சியை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.