
வேலூர் மாவட்டம் காகிதப்பட்டறை பகுதியில் செல்வமூர்த்தி (44) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுனர். இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மது வாங்கியுள்ளார்.
அப்போது அந்த பாட்டிலில் ஸ்டிக்கர் மிதந்துள்ளது. அதாவது பாட்டிலின் மேலே ஒட்டப்படும் ஸ்டிக்கர் உள்ளே மிதந்ததால் அதிர்ச்சி அடைந்த ஓட்டுனர் வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். மேலும் இது தொடர்பான புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி குடிமகன்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.