நம்முடைய நாட்டில் பல இடங்களிலும் பழங்கால பழக்கவழக்கங்களும், நம்பிக்கைகளும்  தொடர்ந்து பின்பற்றபட்டு வருகின்றன. அந்தவகையில் ராஜஸ்தானின் பரத்பூரில் இதுபோன்ற ஒரு நம்பிக்கையை மக்கள் பின்பற்றி வருகிறார்கள். இங்கு, பறவை முட்டையிடும் பகுதியைப் பொறுத்து, மழை எப்போது வரும் என்று கணிக்கப்படுகிறது. அந்தப் பறவையின் பெயர் திடாஹரி ஆகும்.

உயரமான இடத்தில் சென்று  முட்டையிட்டால் விரைவில் மழை பெய்யும் என்றும், வறண்ட ஆற்று ஓடைகளில் முட்டையிட்டால், மழை தாமதமாக வரும் அல்லது வறட்சியின் அறிகுறி என்றும் நம்பப்படுகிறது. மேலும், ஆற்றங்கரையில் வைத்தால், அது சாதாரண மழையின் அறிகுறியாக நம்பப்படுகிறது.