சென்னையில் தாய்ப்பால் விற்பனை தொடர்பான கண்காணிப்பை மாநிலம் முழுவதும் தீவிரப்படுத்த 18 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மாதவரம் பகுதியில் 50 மில்லி லிட்டர் தாய்ப்பாலை பாட்டிலில் அடைத்து ₹500-க்கு விற்று வந்த கடைக்கு நேற்று அதிகாரிகள் சீல் வைத்தனர். புரோட்டீன் பவுடர் விற்பதற்காக உரிமம் பெற்றுவிட்டு தாய்ப்பால் விற்றது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.