
சாலை போக்குவரத்து விதிகளை மீறியதாக TTF வாசன் மீது 7- பிரிவின் கீழ், மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து மதுரை மாவட்ட நீதிமன்றமானது அவருக்கு ஜாமீன் வழங்கியது. மேலும் மதுரை அண்ணா நகர் காவல் கையெழுத்திட உத்தரவிட்டது.
இந்நிலையில் இரண்டாவது நாளான இன்று வழக்கறிஞர்களுடன் காவல் நிலையத்திற்கு TTF வாசன் கையெழுத்திட வந்தார். அப்போது காவல் நிலையத்திற்கு முன்பு கண்ணீர் விட்டு அழுது வீடியோ வெளியிட்ட தனது ரசிகர்களை சந்தித்தார். பின்னர் அவர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டு “யாரும் அழ வேண்டாம், நான் இருக்கிறேன்” என ஆறுதல் கூறியுள்ளார்.