பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா நேற்று முன்தினம் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்ட நிலையில் நடிகர் கமல்ஹாசன் மேடையில் பேசினார். அவர் பேசியதாவது, நான் தமிழன். இந்தியன் என்பது என்னுடைய அடையாளம். இங்கு பிரிச்சு விளையாடனம்னு யாராவது நினைச்சா அது இந்தியாவில் நடக்காது.

நாம் எப்போதும் வந்தாரை வாழ வைப்போம். எப்போதும் அமைதி காக்க வேண்டும் என்பது தமிழனுக்கு தெரியும். தமிழன் ஏன் இந்தியாவுக்கு தலைமை தாங்க கூடாது என்பதே என்னுடைய எண்ணம். பொதுவாக எனக்கு இரண்டாம் பாகம் என்றால் மிகவும் பிடிக்கும். இந்தியன் மிகப்பெரிய கதை. இந்த படம் மொத்தம் 3 பாகங்களாக வருகிறது. நான் இதே போன்று ஒரு படத்தை சிவாஜியை வைத்து எடுக்க விரும்பினேன். மேலும் அவர்தான் என்னை இந்தியன் படத்தில் அப்பா மகனாக நடிக்க சொன்னார் என்று கூறினார்.