குஜராத் மாநிலம் நவ்சாரி நகரில் வசித்து வரும் சஞ்சய் பரியா போக்குவரத்து போலீசாக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி வன்ஷ் என்ற 10 வயது மகன் உள்ளார். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை சஞ்சய் பணிக்கு செல்லும் போது தனது மகனை உடல் அழைத்துச் சென்றுள்ளார். அதன் பிறகு இருவரும் வீடு திரும்பாத நிலையில் போன் சுவிட்ச் ஆஃப் ஆனது. இதனை தொடர்ந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு நேற்று தன் மனைவியிடம் சஞ்சய் செல்போனில் பேசியுள்ளார். அப்போது மகனை கொலை செய்து விட்டதாகவும் பணியிடத்தில் உள்ள அறையில் உடல் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

உடனே தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று பார்த்த போது வாயில் நுரை தள்ளிய நிலையில் கழுத்து நெரிக்கப்பட்டு வன்ஷ் கிடந்துள்ளான். அது மட்டுமல்லாமல் சிறுவனின் உடல் அருகே பூச்சிக்கொல்லி மருந்து பாட்டிலும் காலியாக கிடந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து தலைமுறைவாகியுள்ள சஞ்சயை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.