
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவை மக்களவைத் தொகுதியில் தோல்வியடைந்த நிலையில் கட்சி பிரமுகர் ஒருவர் மொட்டை அடித்துக் கொண்டார். அண்ணாமலை தோற்றுவிட்டால் மொட்டை அடித்து மீசையை மழித்து விடுகிறேன் என மாற்றுக் கட்சி நண்பர்களுடன் பந்தயம் கட்டிய பாஜக பிரமுகர் ஜெய்சங்கர் என்பவர் தேர்தல் முடிவு வந்த பிறகு நடுரோட்டில் மொட்டை அடித்துக் கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் பரமன்குறிச்சியை சேர்ந்த ஜெய்சங்கர் நேற்று நடுரோட்டில் அமர்ந்து மொட்டை அடித்து மீசையை எடுத்துக் கொண்டார். தொடர்ந்து மினரல் வாட்டர் கேன் மூலம் குளியல் போட்ட சம்பவமும் அப்பகுதியினரை வியப்பில் ஆழ்த்தியது.