நாள்தோறும் பல கோடி மக்கள் ரயில் சேவையை பயன்படுத்தி வருகிறார்கள். பயணிகளின் அவசர தேவைக்காக உடனடியாக ரயிலை நிறுத்தக்கூடிய வசதிகளும் இருக்கிறது. அதன்படி பயபயணிகள்  உடல்நலக் குறைவு காரணமாகவோ அல்லது ரயிலுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டாலும் உடனே பெட்டியில் உள்ள செயினை பிடித்து இழுக்கலாம். இதனால் உடனடியாக ரயில் நிறுத்தப்படும் . ஆனால் சமீப காலமாகவே தேவையற்ற காரணங்களுக்காக இந்த செயினை பயணிகள் பயன்படுத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து காரணத்தை பயணி ஒருவர் கூறுகையில், நான் நிறைய லக்கேஜ் கொண்டு வந்தேன். குடும்பத்தினர் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.  இதனால் கூட்டத்திற்கு மத்தியில் என்னுடைய லக்கேஜ்களை ரயில் நிலையத்தில் இறக்க முடியாது. எனவேதான் செயினை பிடித்து இழுத்து நிறுத்தினேன். அபராதமாக நான் செலுத்தும் தொகை ரயில் நிலையம் இறங்கினால் ஆகும் செலவைவிட குறைவானது. எனவே நான் செயினை பிடித்து இழுத்தேன் என்று கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சட்டப்படி காரணம் இல்லாமல் சங்கிலியை இழுத்தால் ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை  தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.