
2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் தோல்வி அடைந்தது பாகிஸ்தான் ரசிகர்களையும் முன்னாள் வீரர்களையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
பாகிஸ்தானில் பிரபல விளையாட்டு பத்திரிக்கையாளரான சோயிப் ஜாட்டின் தனது கருத்தை தெரிவித்துள்ளார் அதன்படி, பாகிஸ்தான் அணி தற்போது பிளவுபட்டுள்ளது , அதாவது ஷாஹீன் அப்ரிடி மற்றும் பாபர் ஆசாம் இருவரும் பேச்சு வார்த்தையில் இல்லை. பேச்சுவார்த்தை இன்றி இருக்கும் இந்த இரண்டு வீரர்களுக்கு இடையே பாலமாக ரிஸ்வான் செயல்பட்டு வருகிறார்.
2023 ODI உலகக் கோப்பைக்குப் பிறகு T20I களில் பாபருக்குப் பதிலாக ஷாஹீன் கேப்டனாக இருந்தபோது இவர்களுக்கிடையே பிரச்சனை தொடங்கியது. பாகிஸ்தான் அரையிறுதிக்குத் தகுதி பெறத் தவறியதைத் தொடர்ந்து அசாம் பதவியை விட்டு விலகினார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் அப்ரிடிக்கு பொறுப்பு வழங்கப்பட்டது, ஆனால் பாபர் இந்த நடவடிக்கையை விரும்பவில்லை, ஷாஹீனை ஆதரிக்க ஒப்புக்கொண்ட போதிலும், புதிய கேப்டனுடன் அவரது நடத்தை வேறுபட்டது இருந்தது.
ஒரு தொடருக்குப் பிறகு பிசிபியின் புதிய தலைவரால் இடது கை வேகப்பந்து வீச்சாளர் பதவி நீக்கம் செய்யப்பட்டபோது, மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்ட பாபர், ஷஹீனிடம் எதையும் வெளிப்படுத்தவில்லை. ரிஸ்வான் கூட அப்ரிடிக்கு ஆதரவளிக்கவில்லை.
தற்போதைய தலைவர் அணியை ஒற்றுமையாக வைத்திருக்கவில்லை என்றும் மூன்று சிறந்த வீரர்களும் ஒற்றுமையாக இல்லை,என்று ஜாட் குற்றம் சாட்டினார்.
Very close source of KING is claiming this. pic.twitter.com/0oLmfEF2sn
— Shoaib Jatt (@Shoaib_Jatt) June 8, 2024