புதுச்சேரியிலுள்ள திலாசுப்பேட்டையில் தினேஷ்குமார் என்பவர் வசித்து வருகின்றார். இவர் குடித்துவிட்டு வந்து மது போதையில் தனது மனைவியிடம் தகராறு ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் எதிர்வீட்டைச் சேர்ந்த ரவி என்பவர் அதனை தட்டிக் கேட்க முயன்ற போது இருவருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.

அப்போது தினேஷ் குமாருக்கு ஆதரவாக அவரது நண்பர் முகமது பைசல் என்பவர் வந்துள்ளார். இவர் தினேஷ் உடன் சேர்ந்து ரவியை கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் ரவி உயிரிழந்த நிலையில் அவரை காப்பாற்ற முயன்ற பக்கத்து வீட்டை சேர்ந்த ராம தீர்த்தம் என்பவருக்கும் அடி விழுந்து அவரும் படுக்காயமடைந்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.