
நாகையில் போராட்டத்தின் போது கடை அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை புதிய பேருந்து நிலையம் அருகே இயங்கி வந்த மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இதனை கண்டித்து நேற்று பல்வேறு அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது அங்கு சிலர் திறந்திருந்த கடைகளை மூட சொல்லி தகராறில் ஈடுபட்டனர்.
மேலும் கடையை அடித்து நொறுக்கி பொருட்களை சேதப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து உரிமையாளர் சிசிடிவி ஆதாரத்துடன் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கடையை அடித்து நொறுக்கி தகராறு செய்த நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.