
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்துள்ள சிறுகாம்பூரில் ரவிக்குமார் மற்றும் சுமதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். ஜவுளி கடைக்கு வேலைக்கு செல்லக்கூடிய சுமதிக்கு வாழ்மால் பாளையத்தை சேர்ந்த மாரிமுத்து என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது பற்றி அறிந்த சுமதியின் உறவினர் ஒருவர் கள்ளக்காதலை கைவிடுமாறு எச்சரித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து சுமதியும் மாரிமுத்துவிடம் பேசுவதை கொஞ்சம் கொஞ்சமாக தவிர்த்து வந்துள்ளார். இறுதியாக ஒரு முறை உல்லாசமாக இருக்க மாரிமுத்து அவரை அழைத்துள்ளார். அதற்கு சுமதி மறுப்பு தெரிவித்த நிலையில் ஆத்திரமடைந்த மாரிமுத்து இன்று சிறுகாம்பூர் பேருந்து இணையத்தில் வைத்து சுமதியை ஓட ஓட குத்தி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில் போலீசார் மாரிமுத்துவை கைது செய்துள்ளனர்.