![](https://www.seithisolai.com/wp-content/uploads/2024/06/5857a7cc-16f1-4f6d-9a69-57c6a0737b4b.jpg)
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மகோபா நகரில் ஒரு தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் மேலாளராக ராஜேஷ்குமார் ஷிண்டே என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கடந்த 19-ம் தேதி வழக்கம் போல் பணிக்கு சென்றுள்ளார். அப்போது அவர் சக ஊழியர்களுடன் சேர்ந்து லேப்டாப்பில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் திடீரென நாற்காலியில் உட்கார்ந்தவாறு கீழே சரிந்து விழுந்தார். அவருடைய கண்கள் மேலே சென்றவாறு மூச்சுப் பேச்சின்றி கிடந்தார்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சக ஊழியர்கள் உடனடியாக அவருக்கு சிபிஆர் செய்ததோடு முகத்தில் தண்ணீர் தெளித்தனர். இருப்பினும் அவருடைய நிலைமை மோசமானதால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறிவிட்டனர். மேலும் அவருக்கு சுமார் 30 வயது இருக்கும் நிலையில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் நாற்காலியில் இருந்து சரிந்தவாறு உயிரிழந்துள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
VIEWER DISCRETION 🚨🚨🚨
Manager at HDFC BANK, age 38 lost his life at work due to heart ailment. So sad to see people at young age getting sudden cardiac issues
RIP 🙏
— Vineeth K (@DealsDhamaka) June 27, 2024