![](https://www.seithisolai.com/wp-content/uploads/2024/06/images.-71.jpeg)
தமிழ்நாடு அரசனது மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு நகர்புறம் மேம்பாட்டு வாரியத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டத்தின் கீழ் வீடுகளை பெற விரும்புபவர்கள் தங்களுடைய ஆதார் கார்டை கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
நலத்திட்டம் பெரும் பயனாளிகள் ஆதாரம் வைத்திருக்க வேண்டும் அல்லது ஆதார் அங்கீகாரத்திற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதார் எண்ணுக்கு விண்ணப்பித்து காத்திருப்பவர்கள் அவர்களுடைய வங்கி புத்தகம், பான் கார்டு ஆகியவற்றை அடையாள சான்றாக கொடுக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.