சுங்கச்சாவடியில் அமலாகும் புதிய கட்டண விதிகளை எதிர்த்து அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் தலைமையில் சுங்கச்சாவடி பகுதியில் அதிமுகவினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கான கட்டண விலக்கு நிறுத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டமானது நடைபெற்று வருகின்றது.

உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு மாதம்தோறும் 340 கட்டணம் இன்று முதல் அமலாவதை எதிர்த்து இந்த போராட்டத்தை அதிமுக நடத்திய நிலையில் அதிமுகவினர் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஆர்பி உதயகுமார் உட்பட அனைவரையும் போலீசார் கைது செய்து அழைத்துச் செல்கின்றனர்.