திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கல்லாவி சுரத்தூர் பகுதியில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவாஜி (19) என்ற மகன் இருந்துள்ளார். இவர்கள் ஓசூரில் தங்கியுள்ள நிலையில் அங்குள்ள ஒரு கல்லூரியில் சிவாஜி பிஎஸ்சி 3-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்த நிலையில் அவருடைய காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் சிவாஜி சம்பவ நாளில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக ஓசூர் டவுன் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் ‌ சிவாஜியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்த நிலையில் அவர்கள் வீட்டிற்கு வந்த நிலையில் தன் மகனின் சடலத்தை பார்த்து கதறி அழுதனர். இதைத்தொடர்ந்து ‌ அவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.