
சென்னையை அடுத்த வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இருக்கிறது. அங்கு ஏராளமான விலங்குகள், பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இங்கு தினந்தோறும் நூற்றுக்குணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து விலங்குகள் மற்றும் பறவைகளை பார்த்துவிட்டு செல்வார்கள். இந்த பூங்காவில் விலங்குகளோடு, பாம்புகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இதில் கொடிய விஷம் கொண்ட உலகில் மிகப்பெரிய பாம்பான மஞ்சள் அனகோண்டா பாம்பும் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த பாம்பு நேற்று 9 குட்டிகளை ஈன்றது. இதேபோன்று மற்றொரு அனகோண்டா பாம்பு 11 குட்டிகளை ஈன்றதுள்ளது. 2 பாம்புகளும் மொத்தம் 20 குட்டிகளை ஈன்றதால் அதிகாரிகள் மற்றும் அங்கு வேலை பார்க்கும் ஊழியர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அந்த குட்டிகளை தனியாக ஒரு கண்ணாடி கூண்டில் அடைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. அதைப் போன்று பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் காட்டுப் பூனை ஒன்று 3 குட்டிகளை ஈன்றதுள்ளது. இந்த பூனை இந்தியாவில் மட்டுமே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.