
தலைநகர் டெல்லியில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் மேற்கு பகுதியில் ஓல்ட் இந்திரா நகரில் ஐஏஎஸ் பயிற்சி மையம் ஒன்று அமைந்துள்ளது. அம்மையத்தில் 30 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு அதீத கனமழையின் காரணமாக தரை தளத்திற்குள் தண்ணீர் புகுந்தது.
இதனால் பயிற்சி மையத்தில் படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் தண்ணீரில் சிக்கிக்கொண்டு வெளியே வர முடியாமல் தவித்தனர். இந்த தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் மாணவர்களை மீட்க போராடினர். அப்போது துரதிஷ்டவசமாக 2 மாணவிகள் மற்றும் ஒரு மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனால் பயிற்சி மையத்தில் உள்ள சக மாணவர்கள் இரவு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சியின் கவன குறைவால் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டது என்று போராட்டம் நடத்திய மாணவர்கள் காவல்துறையினர் பேச்சுவார்த்தைக்கு சமாதானம் ஆகாததால் கைது செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து ஐஏஎஸ் பயிற்சி நிலையத்தின் உரிமையாளர் அபிஷேக் குப்தா மற்றும் ஒருங்கிணைப்பாளர் தேஷ்பால் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் அங்குள்ள தரை தளத்தில் செயல்பட்டு வந்த 13 சிவில் சர்வீஸ் கோச்சிங் சென்டர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.