விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் எம்பியுமான திருமாவளவனுக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து மயிலாடுதுறை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2003 ஆம் ஆண்டு மதமாற்ற தடை சட்டத்திற்கு எதிராக நடந்த பேரணியில் கலவரம் வெடித்த வழக்கில் மயிலாடுதுறை மாவட்ட நீதிபதி விஜயகுமாரி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த வழக்கில் ஆஜராகாமல் இருந்த திருமாவளவனுக்கு எதிராக தற்போது பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.