
குஜராத்தில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. வதோதரா உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த தொடர் மலையின் காரணமாக 18,000-க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டனர். இதைத்தொடர்ந்து 300-க்கும் மேற்பட்ட நபர்கள் மீட்கப்பட்டனர்.
இதன் காரணமாக 29 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஆகஸ்ட் 30-ம் தேதி வரை கனமழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதன் காரணமாக ஒருவரது 3 கார்களும் நீரில் மூழ்கினர். இதனால் அவர் தனக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, மாருதி சுஸுகி சியாஸ், ஃபோர்டு ஈகோஸ்போர்ட் மற்றும் 50 லட்சம் மதிப்புள்ள ஆடி ஏ6 ஆகியவை ஒரே இரவில் பெய்த கனமழையால் சேதம் அடைந்தது.
“இனி வாழ்வதற்கு எதுவும் இல்லை” என்னிடமிருந்த 3 கார்களும் இப்போது போய்விட்டன என்று அவர் தலைப்பிட்டு, கார்கள் தண்ணீரில் மூழ்கிய படங்களை பதிவிட்டிருந்தார்.