
சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு நபர் ஒரு சேவலை ஒரு பெட்டியில் பூட்டி, 6 தாழ்ப்பாள் துளைகளில் ஆறு குச்சிகளை வைத்து பூட்டி விடுகிறார். சிறிது நேரத்தில் அங்கு வரும் கோழி, தனது அறிவுத்திறனைப் பயன்படுத்தி, ஒவ்வொரு குச்சியாக எடுத்து சேவலை விடுவிக்கிறது.
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், சேவலுக்கும் கோழிக்கும் இடையே உள்ள காதலைப் பற்றி பலவிதமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். சிலர் இதை இயற்கையின் அற்புதம் என்று போற்றுகின்றனர். எது எப்படியோ, இந்த வீடியோ நிச்சயமாக நம்மை சிந்திக்க வைக்கிறது. இயற்கையில் உள்ள உயிரினங்களின் உறவுகள் எவ்வளவு ஆழமானவை என்பதை இந்த வீடியோ நமக்கு உணர்த்துகிறது.
View this post on Instagram