இலங்கை கடற்பறையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 50 பேரை தற்போது இலங்கை அரசு விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது. அதாவது கடந்த மாதம் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற தமிழக மீனவர்கள் 18 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை படையினர் கைது செய்து மற்றும் படகுகளை கைப்பற்றினர். 18 தமிழ் நாடு மீனவர்களே காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

வழக்கை விசாரித்த நீதிபதி 13 மீனவர்கள் மீண்டும் இலங்கை கடற் பகுதிக்குள் மீன் பிடித்தால் சிறை தண்டனை கண்டிப்பாக வழங்கப்படும் என்ற எச்சரிக்கையுடன் விடுதலை செய்தார். மேலும் துரதிருஷ்டவசமாக இரண்டாவது முறையாக மீன் பிடிக்க சென்ற ஒருவருக்கு மட்டும் 12 மாத சிறைதண்டனை கொடுத்து உத்தரவிட்டார். இந்த சம்பவத்தை போல கடந்த மாதம் செப்டம்பர் 21ஆம் தேதி அன்று நாகை மாவட்ட மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்பறையினர் கைது செய்தனர் இதனால் இந்த 37 மீனவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வழக்கை விசாரித்த நீதிபதி மீண்டும் எல்லை தாண்டி கடற் பகுதிக்குள் மீன் பிடித்தால் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று 37 மீனவர்களுக்கு எச்சரிக்கை கொடுத்து விடுதலை செய்தார். மேலும் விடுதலை செய்யப்பட்ட 50 மீனவர்களுக்கு இந்திய துணை தூதரக அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

மேலும் இச்சம்போவோம் மீனவர்களின் குடும்பத்தினருக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.