
சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் வீடியோவில், வடமாநிலத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் மோசடியில் இருந்து தன்னை காத்துக்கொண்டதோடு, மர்ம நபரை கலாய்த்த சம்பவம் ஒன்று பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பெண்மணிக்கு குறிக்கோள் இல்லாத அரசின் திட்டத்தில் ரூ.10 இலட்சம் வருவதாக, அதனை உறுதிப்படுத்த ஓடிபி (OTP) கேட்டு ஒரு மர்ம நபர் அழைத்தார். அந்த அழைப்பின் மோசடியைக் கண்டுபிடித்த இளம்பெண், வீடியோ எடுத்தவாறு மர்ம நபரிடம் கலகலப்பாக பேசி கலாய்த்தார்.
சில நொடிகளுக்குள் இளம்பெண் மோசடியைக் கண்டு அதனை நையாண்டியாக கையாண்டது, பலருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. மோசடி அழைப்பாளர்களின் முக்கிய நோக்கம் வங்கிக் கணக்குகளில் இருந்த பணத்தை எளிதில் திருடும் முயற்சியாகும். இவ்வாறான அழைப்புகளை அவசரமாகக் கருதாமல், நிதானமாக பதிலளிப்பது அவசியமாகும்.
பண்டிகை நாட்களில் குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கும் என்ற மோசடிகளும், போலியான அரசு திட்டங்கள் மூலம் ஏமாற்றும் முயற்சிகளும் அதிகரிக்கின்றன. இவ்வாறான சூழலில் மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் நடவடிக்கைகள் மிகவும் முக்கியம். சைபர் குற்றங்கள் பெருகி வரும் நிலையில், ஒவ்வொருவரும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
Scam-Call Kalesh b/w a Girl and a Scammer💀
pic.twitter.com/O8ZZxUlyYo— Ghar Ke Kalesh (@gharkekalesh) October 16, 2024